search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயி கொலை"

    • கொலை பற்றி தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
    • முன்விரோதம் காரணமாக 5-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கும்பலாக வந்து இசக்கி பாண்டியை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது.

    களக்காடு:

    நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மேலகாடுவெட்டியை சேர்ந்தவர் இசக்கிபாண்டி (வயது 52). விவசாயி. இவருக்கு சங்கரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இவரது வீட்டின் அருகே அவரது தாயார் உச்சிமாகாளி டீக்கடை நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் இன்று அதிகாலை 5.30 மணியளவில் அந்த ஊரில் மின்சாரம் தடைபட்டது. அப்போது ஒரு கும்பல் மோட்டார் சைக்கிள்களில் இசக்கிபாண்டி வீட்டின் அருகே வந்தனர். பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அவரது வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்தது.

    அப்போது அங்கு தூங்கிக்கொண்டிருந்த இசக்கிப்பாண்டியை அந்த கும்பல் கண் இமைக்கும் நேரத்தில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதனால் அலறித்துடித்த இசக்கி பாண்டியனின் சத்தம் கேட்டு அவரது மனைவி மற்றும் உறவினர்கள் எழுந்து அங்கு ஓடி வந்தனர். உடனே அந்த கும்பல் மோட்டார் சைக்கிளில் ஏறி தப்பி ஓடி விட்டனர். இதற்கிடையே படுகாயம் அடைந்த இசக்கிப்பாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை கண்டு அவரது உறவினர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    கொலை பற்றி தகவல் அறிந்ததும் களக்காடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் இசக்கிபாண்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அதில், முன்விரோதம் காரணமாக 5-க்கும் மேற்பட்டவர்கள் சேர்ந்து கும்பலாக வந்து இசக்கி பாண்டியை கொடூரமாக கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் மேலகாடுவெட்டியில் வழக்கமாக தினசரி காலை 6 மணிக்கு மின்தடை ஏற்பட்டு வந்துள்ளது. இதனை பயன்படுத்தி திட்டமிட்டு மர்மநபர்கள் இசக்கி பாண்டியை வெட்டிக்கொலை செய்துள்ளனர். இதில் தொடர்புடைய கும்பல் குறித்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    • தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாக தேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியூர் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் மறைந்திருந்த நாகதேஜாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் ஏலூர் மாவட்டம், அகிரி பள்ளி மண்டலம், சோப்பரமேடுவை சேர்ந்தவர் சீனிவாசராவ் (வயது 47). இவரது மகன் நாக தேஜா.

    சீனிவாசராவுக்கு 4 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. சீனிவாசராவ் மகனுடன் சேர்ந்து விவசாயம் செய்து வந்தார்.

    இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த திருமணமான பெண்ணுடன் நாகதேஜாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. இதனை அறிந்த சீனிவாசராவ் கள்ளத்தொடர்பை கைவிட்டு வாழ வேண்டும் என அறிவுரை கூறினார்.

    ஆனாலும் தந்தையின் அறிவுரையை ஏற்காமல் நாக தேஜா கள்ளத்தொடர்பை தொடர்ந்து வந்தார். சீனிவாச ராவ் மகனுக்கு அடிக்கடி அறிவுரை கூறியதால் ஆத்திரம் அடைந்தார். கள்ளத்தொடர்புக்கு இடையூறாக உள்ள தந்தையை கொலை செய்ய நாக தேஜா முடிவு செய்தார்.

    நேற்று முன்தினம் இரவு இது சம்பந்தமாக தந்தை மகன் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாக தேஜா அருகில் இருந்த செங்கல்லை எடுத்து தந்தையை சரமாரியாக தாக்கினார். தலையில் படுகாயம் அடைந்து ரத்தம் கொட்டியது. இதனால் மயங்கி கீழே விழுந்த சீனிவாசராவ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    தந்தை இறந்ததை அறிந்த நாகதேஜா அங்கிருந்து தப்பி ஓடினார்.

    அருகில் இருந்தவர்கள் இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அகிரி பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சீனிவாசராவின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து வெளியூர் தப்பிச்செல்ல பஸ் நிலையத்தில் மறைந்திருந்த நாகதேஜாவை கைது செய்தனர்.

    • குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
    • முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர்.

    ஆத்தூர்:

    சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த தென்னம்பிள்ளையூரை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 55). விவசாயி. இவரது மகன் பிரசாந்த் (28). இவர் அதே பகுதியை சேர்ந்த தனது தாய் மாமன் முருகேசனின் 17 வயது சிறுமியை காதலித்து வந்துள்ளார்.

    இந்த நிலையில் கடந்த செப்டம்பர் மாதம் 28-ந் தேதி வீட்டில் இருந்த முருகேசனின் மகள் திடீரென காணாமல் போனார். இதையடுத்து குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் அவரை தேடி வந்தனர். மேலும் இதுதொடர்பாக ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் முருகேசனின் மகளை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பவானியில் உள்ள குணசேகரனின் தம்பி வெள்ளியங்கிரி என்பவர் வீட்டில் சிறுமி மற்றும் பிரசாந்த் ஆகியோர் இருப்பது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து கடந்த 2-ந்தேதி இருவரையும் ஏத்தாப்பூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    பின்னர் இரு தரப்பையும் அழைத்து வாழப்பாடி மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது சிறுமி தனது பெற்றோருடன் செல்வதாக கூறியதால், சிறுமியை பெற்றோருடன் போலீசார் அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் பிரசாந்த் தனது தாய்மாமன் முருகேசன் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, மீண்டும் தனது மகளை அழைத்து செல்ல வந்ததாக கூறி முருகேசன் குடும்பத்தினர் பிரசாந்த்துடன் தகராறு செய்தனர். இதில் இரு தரப்பிற்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது முருகேசன் குடும்பத்தினர், பிரசாந்த் மற்றும் அவரது தந்தை குணசேகரன் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதில் குணசேகரன் படுகாயம் அடைந்தார்.

    இதையடுத்து அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

    மேலும் இது தொடர்பாக ஏத்தாப்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் முருகேசன் (52), அவரது மனைவி முத்தம்மாள் (45), முருகேசனின் தம்பி சிவக்குமார் (50), அவரது மனைவி தமிழரசி (40) ஆகியோர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்தனர். இதில் முருகேசன் மற்றும் சிவக்குமாரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த குணசேகரன் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து கொலை முயற்சி வழக்கை கொலை வழக்காக மாற்றி ஏத்தாப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பணம் கொடுக்கல்-வாங்கலில் தகராறு
    • வாலிபர் கைது

    ஆரணி:

    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் பகுதியை சேர்ந்தவர் குமார் (46), விவசாயி.

    இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை மாவட்டம், நரியம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு வந்து தங்கி இருந்தார்.

    சேத்துப்பட்டு-செஞ்சி சாலையில் உள்ள ஆவணியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கமலக்கண்ணன் (வயது 33). இவர்கள் இருவரும் நண்பர்கள்.

    இந்த நிலையில் நேற்று மாலை இருவரும் செஞ்சி சாலையில் உள்ள ஒரு பெட்ரோல் பங்க் அருகே சென்று கொண்டிருந்தனர். அப்போது பணம் கொடுக்கல்-வாங்கலில் குமார், கமலக்கண்ணன் இடையே தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.

    இதில் ஆத்திரம் அடைந்த கமலக்கண்ணன் அங்குள்ள ஒரு கட்டிடம் கட்டும் இடத்தின் அரு கில் கிடந்த மண்வெட்டியை எடுத்து வந்து, குமாரின் தலையில் சரமாரியாக தாக்கினார். பின்னர் அவரை தாக்கி விட்டு அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    பலத்த காயம் அடைந்த குமார் ரத்த வெள்ளத்தில் கீழே சுருண்டு விழுந் தார். அவரை அங்கிருந்தவர் கள் மீட்டு சேத்துப்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேல் சி கிச்சைக்காக திருவண்ணா மலை அரசு மருத்துவக் கல் லூரி மருத்துவ மனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி குமார் நேற்று இரவு பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசில் புகார் செய்யப்பட் டது. அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தமிழரசி வழக்குப்பதிவு செய்து கமலக் கண்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். கொடுக்கல்- வாங்கல் தகராறில் விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நான் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தேன்.
    • வேல்முருகன் எனது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்தார்.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த ஊத்துமலை அருகே உள்ள கண்ணாடி குளம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 42). இவர் ஊருக்கு மேற்கே உள்ள தனது தோட்டத்தில் விவசாயம் செய்து வந்தார்.

    நேற்று அவர் தோட்டத்தில் மாடுகளை மேய்த்து கொண்டிருந்தபோது, அங்கு மொபட்டில் வந்த ஒரு நபர் அரிவாளால் வேல்முருகனை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தார். பின்னர் ஆத்திரம் தீராத அந்த நபர் வேல்முருகனின் தலையை அரிவாளால் துண்டித்து சாக்கு மூட்டையில் தலையை போட்டு கட்டி தனது மொபட்டில் எடுத்துச்சென்றார்.

    இதுகுறித்து ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வேல்முருகன் தலையை தேடிவந்தார். அப்போது தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள ராஜாபுதுக்குடி கிராமத்தில் இசக்கியம்மாள் என்பவரது வீட்டின் முன் வேல்முருகனின் தலை கிடந்தது தெரிய வந்தது. அதனை போலீசார் மீட்டனர்.

    தொடர்ந்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தியதில் இசக்கியம்மாளின் கணவரான ஆலங்குளம் அருகே உள்ள கண்ணாடிகுளத்தை சேர்ந்த இளநீர் வியாபாரியான வேல்சாமி(37) என்பவர் வெட்டிக்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    போலீஸ் விசாரணையில் வேல்சாமி கூறியதாவது:-

    எனக்கும், எனது மனைவிக்கும் திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். நான் கயத்தாறு சுங்கச்சாவடி அருகே இளநீர் வியாபாரம் செய்து வந்தேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கண்ணாடிகுளத்தில் வசித்து வந்தேன்.

    அப்போது எனது மாடுகள் வேல்முருகனின் தோட்டத்தில் மேய்ந்து விட்டதாக எனக்கும், அவருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் நான் கயத்தாறு பகுதிக்கு குடும்பத்துடன் சென்று விட்டேன். இந்நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு நான் மீண்டும் கண்ணாடிகுளத்தில் குடியேறினேன்.

    பின்னர் வேல்முருகன் எனது மனைவியுடன் அடிக்கடி பேசி வந்தார். இதனால் அவர்கள் 2 பேரையும் குறித்து நான் சந்தேகம் அடைந்தேன். இதனால் எனக்கும், எனது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டதால் அவர் என்னை விட்டு பிரிந்து அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்றுவிட்டார். ஏற்கனவே ஆத்திரத்தில் இருந்த நான், எனது மனைவியை பிரிந்ததற்கு வேல்முருகன் தான் காரணம் என்று எண்ணினேன். இதனால் அவரை நேற்று வெட்டிக்கொலை செய்தேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அதனை போலீசார் வாக்குமூலமாக பதிவு செய்து கொண்டனர்.

    • திருப்பத்தூர் கோர்ட்டு தீர்ப்பு
    • 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்

    திருப்பத்தூர்:

    திருவண்ணாமலை மாவட்டம், ஜமுனாமரத்தூர் அருகே உள்ள பட்டன் கோவிலூர் கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 37), விவசாயி.

    கொலை

    இவருக்கும், இவரது உறவினரான அதே பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளியான துரை என்பவருக்கும் நிலம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது.

    கடந்த 2012-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந் தேதி துரைக்கு சொந்தமான நிலத்தில் சின்னதுரை மாடுகளை மேய்த்துள்ளார். இதனை துரை தட்டிக்கேட்டார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரமடைந்த துரை மற்றும் அவருடைய ஆதரவாளர்களான வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 4 பேரும் சேர்ந்து சின்னதுரையை சரமாரியாக தாக்கினர்.

    அப்போது துரை உருட்டு கட்டையால் சின்னது ரையின் தலையில் தாக்கினார். இதில் படுகாயம் அடைந்த சின்னதுரை ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது குறித்து ஜமுனாமரத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து துரை, வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை திருப்பத்தூர் மாவட்ட கூடுதல் அமர்வு கோர்ட்டில் நடந்தது. விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

    இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் பி.டி.சரவணன் ஆஜரானார். அதில் துரைக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மீனாகுமாரி தீர்ப்பு வழங்கினார்.

    வெள்ளையன், இந்திராணி, ஜானகி ஆகிய 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

    • கோவிந்தசாமிக்கும் அவரது மகன் நடராஜனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.
    • நெஞ்சில் காயம் ஏற்பட்டதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த குண்டடம் முத்தையம்பட்டியை சேர்ந்தவர் கோவிந்த சாமி (வயது 86). விவசாயியான இவருக்கு சாமிநாதன் (60), நடராஜ் (55) என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    கோவிந்தராஜ்க்கு சொந்தமாக அப்பகுதியில் தோட்டம் உள்ளது. மேலும் கோவிந்தசாமிக்கும் அவரது மகன் நடராஜனுக்கும் சொத்து தகராறு இருந்து வந்தது.

    இந்தநிலையில் இன்று காலை கோவிந்தசாமி தனது தோட்டத்தில் வளர்ப்பு மாடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது தோட்டத்தில் உள்ள தென்னை மரத்தில் இருந்து விழுந்த 2 தேங்காய்கள் சாக்கடையில் கிடந்தன.

    அதனை எடுத்த கோவிந்தசாமி, எதிரே உள்ள தோட்டத்திற்குள் வீசி உள்ளார். இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த மகன் நடராஜனின் மனைவி ஈஸ்வரி (50), பேத்தி லாவண்யா (25) ஆகியோர் அடுத்தவர் தோட்டத்திற்குள் எதற்காக தேங்காயை வீசினாய் என தகாத வார்த்தைகளால் பேசினர்.

    இதில் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த ஈஸ்வரி, லாவண்யா ஆகியோர் கீழே கிடந்த கல் மற்றும் தேங்காயை எடுத்து கோவிந்தசாமி மீது வீசினர் . இதில் நெஞ்சில் காயம் ஏற்பட்டதில் கோவிந்தசாமி சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் குண்டடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கோவிந்தசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஈஸ்வரி, லாவண்யா ஆகியோர் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர். லாவண்யா பல்லடத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விவசாயியை மருமகள் மற்றும் அரசு பெண் அதிகாரி கல்லால் தாக்கி கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஈஸ்வரமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
    • தண்டனை காலம் முடிந்து இருவரும் வெளியே வந்திருந்தனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை அடுத்த கொண்டரசம்பாளையம் ஓட்டக்காடு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வர மூர்த்தி (வயது 60). இவர் தனக்கு சொந்தமான தோட்டத்தில் விவசாயம் செய்து கொண்டு மாடுகள் வளர்த்து வந்தார். இன்று அதிகாலை மாடுகளில் பால் கறந்து விட்டு கொட்டா புளிபாளையம் பால் கூட்டுறவு சங்கத்தில் வழங்குவதற்காக மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.

    கொண்டரசம்பாளையம் விநாயகர் கோவில் அருகே செல்லும் போது திடீரென அங்கு வந்த ஈஸ்வர மூர்த்தியின் உடன் பிறந்த அண்ணன் பழனிச்சாமி(63) கண்ணிமைக்கும் நேரத்தில் ஈஸ்வரமூர்த்தியை அரிவாளால் வெட்டினார். இதில் ஈஸ்வரமூர்த்தி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இது குறித்து தாராபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தாராபுரம் டி.எஸ்.பி., கலையரசன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஈஸ்வரமூர்த்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தாராபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் பழனிச்சாமியை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர் தலைமறைவாகி விட்டார். ஈஸ்வரமூர்த்தி கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

    அப்போது ஈஸ்வர மூர்த்திக்கும் பழனிச்சாமிக்கும் பொதுவாக 8 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் ஈஸ்வரமூர்த்தி மனைவி முத்துலட்சுமி மற்றும் மகள்கள் வாணி ஸ்ரீ(12 ), இளங்கவி(11) ஆகியோருடன் தோட்டத்தில் வசித்து வந்தார். அதே தோட்டத்தில் மற்றொரு பகுதியில் பழனிசாமி வசித்து வந்தார்.

    இந்தநிலையில் நிலத்தை பிரித்து கொடுக்காத காரணத்தினால் ஈஸ்வர மூர்த்திக்கும் பழனிச்சாமிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த பிரச்சினையில் இன்று காலை, தம்பி என்றும் பாராமல் ஈஸ்வர மூர்த்தியை பழனிச்சாமி வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். தலைமறைவான அவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    ஏற்கனவே சகோதரர்களான பழனிச்சாமி , ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் கடந்த 38 வருடங்களுக்கு முன்பு அப்பகுதியை சேர்ந்த அண்ணன்-தம்பியான சேது , ஸ்ரீதர் ஆகியோரை கொலை செய்த வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். தண்டனை காலம் முடிந்து இருவரும் வெளியே வந்திருந்தனர். இந்தநிலையில் சொத்து பிரச்சினையில் அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சினையில் ஈஸ்வர மூர்த்தியை பழனிச்சாமி கொலை செய்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தற்போது தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளது.
    • நீண்ட நேரம் ஆகியும் மதுகர் ரெட்டி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தக்காளி தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

    திருப்பதி:

    தக்காளி விலை கிலோ ரூ.150 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நாடு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு காரணமாக விலையேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் தக்காளி மதிப்பு எங்கேயோ சென்று விட்டது.

    ஆந்திராவில் கடந்த வாரம் தக்காளி விற்பனை செய்து விட்டு பணத்துடன் வீடு திரும்பிய விவசாயி ஒருவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இந்த நிலையில் மற்றொரு விவசாயி கொலை செய்யப்பட்டுள்ளார்.

    ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் பெட்ட திப்பா சமுத்திரத்தை சேர்ந்தவர் மதுகர் ரெட்டி. விவசாயி.

    இவருக்கு ஊருக்கு வெளியே விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலத்தில் தக்காளி பயிரிட்டு உள்ளார்.

    தற்போது தக்காளியின் விலை உச்சத்தை எட்டி உள்ளதால் கொள்ளையர்கள் தக்காளியை பறித்து சென்று விடுவார்கள் என எண்ணி தினமும் தக்காளி தோட்டத்திற்கு பாதுகாப்பாக காவல் இருந்து வந்தார்.

    நேற்று முன்தினம் இரவு மதுகர் ரெட்டி தக்காளி தோட்டத்திற்கு காவலுக்கு சென்று இருந்தார். அப்போது அங்கு வந்த மர்மநபர்கள் தக்காளிகளை பறித்தனர்.

    இதனைக் கண்ட மதுகர் ரெட்டி தக்காளி பறிக்கும் நபர்களை விரட்டினார். இதில் ஆத்திரம் அடைந்த அவர்கள் மதுகர் ரெட்டியின் கழுத்தை நெரித்தனர். இதில் அவர் துடிதுடித்து இறந்தார். இதையடுத்து தோட்டத்தில் இருந்து தக்காளிகளை கும்பல் பறித்து சென்றனர்.

    நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் மதுகர் ரெட்டி வீட்டிற்கு வராததால் அவரது குடும்பத்தினர் தக்காளி தோட்டத்திற்கு வந்து பார்த்தனர்.

    அப்போது மதுகர் ரெட்டி இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து மதனப்பள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மதுகர் ரெட்டி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதனப்பள்ளி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிவராமனின் மகன் மதுகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
    • சரணடைந்த 2 பேரை சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    மத்தூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகேயுள்ள தமிழக மாநில எல்லையாக உள்ள ஜூஜூவாடி கிராமம் பாலாஜி நகரை சேர்ந்த சிவராமன் (வயது52) என்பவர் கால்நடை பண்ணை வைத்து

    பராமரிப்பு செய்து வந்தார். இவருக்கு போப்பம்மாள் என்ற மனைவியும், மதுகுமார் என்ற மகனும், சைத்ரா என்ற மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் கடந்த 8-ந் தேதி வழக்கம்போல் கால்நடைகளுக்கு தேவையான தீவன புல்லை வாங்கி கொண்டு ஆம்னி காரில் வந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் காரின் குறுக்கே வழி மறித்து கண்ணில் மிளகாய்பொடி தூவி பட்டா கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர்.

    இந்த சம்பவம் குறித்து சிவராமனின் மகன் மதுகுமார் கொடுத்த புகாரின்பேரில் ஓசூர் சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

    இந்நிலையில் ஓசூர் காவல் துணை கண்காணிப்பாளர் பாபு பிரசாத் தலைமையில் கொலை செய்தவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் சிவராமனை கொலை செய்ததாக போச்சம்பள்ளி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.வீ.சண்முகநாதன் முன்னிலையில் நேற்று மதியம் 2 பேர் சரணடைந்தனர்.

    சரணடைந்த இருவரும் ஜூஜூவாடி காந்தி நகரை சேர்ந்த சேகர் என்பவரது மகன் சீனிவாஸ் என்கிற காந்தி (26) அவரது நண்பர் ஓசூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஸ்ரீகாந்த் (23) ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து சரணடைந்த 2 பேரையும் சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இந்த கொலை வழக்கு தொடர்பாக ஓசூரை அடுத்த பேகைப்பள்ளியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன் முரளி (27), ஜூ ஜுவாடியைச் சேர்ந்த திலீப் குமார் என்கிற கொன்னே (28), மகேந்திரன் (32), ஊத்தங்கரையை அடுத்த ஆனந்தூரைச் சேர்ந்த சிம்புவின் மனைவி அனுசியா (23) ஆகிய 4 பேரை ஓசூர் சிப்காட் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜுஜுவாடி பாலாஜி நகரை சேர்ந்தவர் சிவராமப்பா (51) விவசாயி. மேலும் இவர் வீட்டில் பசுமாடுகளை வளர்த்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று காலை, அந்த பகுதியில், பசுமாடுகள் தீவனத்திற்காக புற்களை அறுத்து காரில் ஏற்றி வீடு நோக்கி திரும்பி சென்று கொண்டிருந்தார்.

    அப்போது ஜுஜு வாடியில் உள்ள மயானம் அருகே, மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் 2 பேர், காரை வழிமறித்து, அவரை வெளியே இழுத்து வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியோடி விட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்த ஒசூர் சிப்காட் போலீசார் அங்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். கொலையாளிகளை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்த நிலையில் சிவராமப்பாவுக்கும், கர்நாடக மாநிலம் பெங்களூருவைச் சேர்ந்த பாபு என்கிற ராமகிருஷ்ணன், நாராயணசாமி ஆகியோருக்கு இடையே நிலத்தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது. இதற்காக கோர்ட்டில் வழக்கு நடந்து வருகிறது என்பது தெரியவந்தது.

    தனது தந்தையை நிலத்தகராறு காரணமாக பாபு என்கிற ராம கிருஷ்ணன், நாராயணசாமி ஆகிய 2 பேரும் வெட்டி கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சிவராம் மகன் மாதுகுமார் போலீசில் புகார் செய்தார்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக உள்ள 2 பேரையும் போலீசார் தேடிவருகின்றனர்.

    • பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார்.
    • அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தாராபுரம்:

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் உடுமலை ரோடு தளவாய்பட்டினம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் தண்டபாணி (வயது 55) விவசாய தொழிலாளி. இவரது மகன் காளிதாஸ் (29).

    காளிதாசுக்கு திருமணமான நிலையில் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி வீட்டிலேயே இருந்து வந்துள்ளார். இதனால் தண்டபாணி வேலைக்கு செல்லுமாறு மகனை கண்டித்துள்ளார். இதன் காரணமாக இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    நேற்று அறுவடை பணியை முடித்துக்கொண்டு தண்டபாணி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் படுத்திருந்த காளிதாசுக்கும் தண்டபாணிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மகனை கண்டிக்க இரும்பு கம்பியை எடுத்து மிரட்டிய போது அந்த இரும்பு கம்பியை பிடுங்கிய காளிதாஸ், தந்தை என்றும் பாராமல் தண்டபாணியின் தலையில் ஓங்கி அடித்தார்.

    இதில் பலத்த காயம் அடைந்த தண்டபாணி ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்றிரவு தண்டபாணி இறந்தார்.

    இதுகுறித்து அலங்கியம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தலைமறைவான காளிதாசை தேடி வருகின்றனர். தந்தையை மகன் அடித்துக்கொன்ற சம்பவம் தாராபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×